தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் உள்ள 37-38 வது KM போஸ்ட்டுக்கு இடையில் செல்ஃபி எடுத்துக் கொண்டு பொறுப்பற்ற முறையில் பயணித்த தம்பதியருக்கு ரூ. 15,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்த மாத்தறை மற்றும் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தம்பதியினர் தங்களது வாகனத்தின் மேற் கூரையைத் திறந்து செல்ஃபி எடுத்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 26ல் நிகழ்ந்த இச்சம்பவம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவின் பாதுகாப்பு கமெராவில் பதிவாகியிருந்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு மத்துகம பிரதான நீதவான் தம்மிக்க உடுவவிதானவினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.