Ads Area

கல்முனை றோயல் பாடசாலைக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்.! kalmunai royal school

 மாளிகைக்காடு நிருபர்

குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினால் கல்முனை கமு/கமு/ றோயல் வித்தியாலயத்திற்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு இன்று (24) வியாழக்கிழமை காலை பாடசாலை முன்றலில் நடைபெற்றது.

அரச காரியாலயங்கள், பாடசாலைகள்,  மதஸ்தலங்களுக்கு இலவச குடிநீர்  வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின்  பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றிசாட் (றஸ்மி) கமு/கமு/ றோயல் வித்தியாலய மாணவர்களுக்காக இவ்வேலைத்திட்டத்தை பாடசாலை நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்.

கமு/கமு/ றோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மேலும் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் சிட்மன் நிறுவன பணிப்பாளருமான நௌபர் ஏ பாவா,  அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கணனி தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான யூ. எல். என். ஹுதா, கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம். ஸம்ஸம், அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் பிரதி செயலாளர் ஏ.ஆர்.எம். ஜௌஸான், கலாச்சார செயலாளர் மௌலவி என். சப்னி அஹமட், கலை செயலாளர் கலைஞர் என்.எம். அலிக்கான், பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe