Ads Area

புர்ஜ் கலீபாவில் லேசர் ஷோ ஒளிபரப்ப எவ்வளவு கட்டணம்?.. சொந்த காசில் ஒளிபரப்பியவர்கள் யார் யார்?

துபாயில் உலகின் மிக உயரமான கட்டடமாக புர்ஜ் கலீபா உள்ளது. இங்கு உலகின் முக்கிய நிகழ்வுகளும் வெளிநாட்டு தலைவர்கள், அமைச்சர்கள் வரும் போது அவரவர் நாடுகளின் சிறப்புகள் அடங்கிய காட்சிகள் ஒளிபரப்புவது வாடிக்கை. இந்திய சுதந்திர தினம், குடியரசு தினத்தின் போது புர்ஜ் கலீபா கட்டடத்தில் இந்திய தேசியக் கொடி ஒளிர்ந்தது.

அது போல் முதல்வர ஸ்டாலின் துபாய் சென்றுள்ளதால் புர்ஜ் கலீபா கட்டடத்தில் தமிழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியான கீழடி, பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதனால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அது போல் முதல்வர ஸ்டாலின் துபாய் சென்றுள்ளதால் புர்ஜ் கலீபா கட்டடத்தில் தமிழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியான கீழடி, பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதனால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டில் "புர்ஜ் கலீபாவில் ஒளிபரப்பப்பட்ட கீழடி, பொருநை நாகரிக காட்சிகளை உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றை தெற்கில் இருந்து எழுதுவோம் என குறிப்பிட்டிருந்தார். இந்த புர்ஜ் கலீபா கட்டடத்தில் இதுவரை என்னென்ன ஒளிபரப்பாகியுள்ளது தெரியுமா?

உலக தலைவர்கள், அமைச்சர்கள் வந்தால் ஐக்கிய அரபு அமீரக அரசே அந்தந்த நாடுகளின் சிறப்பை விளக்கி அவர்களை கவுரவப்படுத்தும். இதே தனிநபர்கள் இந்த கட்டடத்தில் ஏதேனும் ஒளிபரப்ப வேண்டுமானால் இந்திய மதிப்பில் 50 லட்சம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் 3 நிமிடங்களுக்கு அவர்கள் கேட்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும்.

இந்த கட்டணத்தை செலுத்தி இந்தி நடிகர் ஷாரூக் கான் தனது பிறந்த நாளுக்கு லேசர் ஷோ ஒளிபரப்பச் செய்தார். அது போல் நடிகர்கள் ரன்வீர் கபூர், தீபிகா, துல்கர் சல்மான் உள்ளிட்டோரும் இந்த புர்ஜ் கலீபா கட்டடத்தில் லேசர் ஷோக்களை ஒளிபரப்பியுள்ளனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe