குவைத் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.
குவைத் ஜிலிப் ஸூக் பகுதியில் குற்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 ஆண்கள், 8 பெண்கள் உட்பட 11 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களும், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா.