Ads Area

பா.உ. முஷாரப் U-turn அடித்துள்ளதாக பா.உ. சாணக்கியன் 5000 ரூபா கொடுத்து கிண்டல்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களுக்கு 5000 ரூபா பணத்தை கொடுத்தமை பாராளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று கூடிய பாராளுமன்ற அமர்வில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இன்று முதல் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையின் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் தொடர்பில் பொதுமக்களின் வேண்டுகோளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் எதிர்க்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) ஆதரவளித்தவராக அறியப்பட்டவராவார். அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க பணம் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது ​​இது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஸ்ஸரப் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் க்கு 5000 நோட்டை கொடுத்துள்ளார்.  இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி., முஷாரப்பை தடையின்றி உரை நிகழ்த்த அனுமதிக்குமாறு, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். 

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe