Ads Area

கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார சைக்கிள் பாவனை அதிகரிப்பு.

 பாறுக் ஷிஹான்

இன்றைய சூழலில் நாடளாவிய ரீதியில் எரிபொருள் பிரச்சினை காணப்படுவதனால் பொதுமக்கள் மாற்று யுக்தியுடைய பல உபகரணங்களை அன்றாடச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு மின் சேமிப்பு சைக்கிளை தற்போது பொதுமக்கள் பரவலாக பாவிப்பதை அவதானிக்க முடிகின்றது.

சுமார் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் குறித்த சைக்கிள் இலங்கை நாணய மதிப்பில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாகவுள்ளதாக பாவனையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

8 மணித்தியாலங்கள் மின்சாரத்தின் உதவியுடன் சார்ஜ் செய்யப்படும் இச்சைக்கிள் மின்சார மின்கலத்தின் சக்தியுடன் விரைவாகப் பயணத்தை ஆரம்பிக்கின்றது.

எரிபொருளில்லாமல் இலகுவாக ஒரு மனிதன் இச்சைக்கிளைப் பயன்படுத்தி தத்தமது வேலைகளை விரைவாகப் பூர்த்தி செய்வறதுடன், இரவில் பயணம் செய்வதற்குரிய சக்தி வாய்ந்த மின்குழிழ் இச்சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், வீதியில் பயணிக்கின்ற போது எதிரே வருகின்ற வாகனங்களுக்கு சமிஞ்சை வழங்கக்கூடிய வசதியையும் இச்சைக்கிள் கொண்டுள்ளது.

ஒரே தடவையில் சுமார் 100 கிலோ மீற்றர் தூரத்திற்கு சென்று இலக்கினை அடைந்து திரும்ப முடிவதுடன், இதில் அமர்ந்து செல்ல பிரத்தியேக தயாரிப்பு ஆசனம் பொருத்துவதற்குரிய ஏற்பாடும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் இல்லாத இக்காலப் பகுதியில் பொதுமக்கள் இவ்வாறான சைக்கிள் வண்டிகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe