Ads Area

தாமரைக் கோபுரத்தில் நுழைய பயணச்சீட்டு 500 - 2000 ரூபா!

 


எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் கொழும்பில் உள்ள "தாமரைக் கோபுரத்தில்" செயற்பாடுகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இங்கு நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆரம்பிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எவரும் பயணச்சீட்டை பெற்று இந்த அனுபவத்தை அனுபவிக்க முடியும் எனவும், அதற்கான பயணச்சீட்டு 500 ரூபா 2000 ரூபா எனவும், வெளிநாட்டவர் 20 அமெரிக்க டொலர் பெறுமதியான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இரண்டாயிரம் ரூபாய் டிக்கெட் பெறும் எவரும் வரிசையில் காத்திருக்காமல் வளாகத்திற்குள் நுழைய முடியும், மேலும் கோபுரத்தின் உச்சிக்கு  கூட செல்ல முடியும்.

மேலும், 500 ரூபாய் டிக்கெட் பெறும் ஒருவர், ஒரு முறை மட்டுமே டவரில் ஏற முடியும் என்றும், அடுத்த சில மாதங்களில் டிக்கெட்டுக்கு பதிலாக கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe