சம்மாந்துறை பிரதேச சபையின் அனுசரணையுடன் வளத்தாப்பிட்டி நாவலர் சனசமூக நிலையமும், வீனஸ் விளையாட்டுக்கழகமும், வளத்தாப்பிட்டி பொதுமக்களும் இணைந்து நடாத்திய தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை வளத்தாப்பிட்டி பொது மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்கள் கலந்துகொண்டு காலை நிகழ்வான மரதன் ஓட்டத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் பிற்பகல் நிகழ்வுகளான கலை கலாச்சார பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் ஆராம்பித்து வைத்துடன் வெற்றியீட்டிய வீரர்களுக்கு பரிசுப்பொதிகளையும் வழங்கி வைத்தார்.
இதில் சிறப்பு அதிதியாக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ.எம்.எஸ்.பீ.மௌலானா, விசேட அதிதியாக முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயச்சந்திரன் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.