Ads Area

வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.

 ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை மோட்டார் போக்குவரத்து துறையின் தகவல் அமைப்பில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளார்.


மோட்டார் போக்குவரத்துத் துறையில் தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் 60 இலட்சம் வாகனங்கள் மட்டுமே QR குறியீடு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


அதன்படி, தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு மேலாக வருமான அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்கள் மாவட்ட வாகன பரிசோதகர்கள் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டு தகவல் அமைப்பிலிருந்து நீக்கப்படும் என நிஷாந்த அனுருத்த மேலும் தெரிவித்துள்ளார் .


ஐந்து வருடங்களுக்கு மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe