அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளநீர் தான நிகழ்வு குமண காட்டுப்பகுதியில் வைத்து நடைபயணமாய் கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சுதத் கமகே அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை, சம்மாந்துறை கல்முனை,பொத்துவில், மஹோயா,அக்கரைப்பற்று , Base work shop காரியாலயங்களின் பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் மாவட்டக்காரியாலய பிரதான பொறியியலாளர்,பொறியியலாளர்கள் கணக்காளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நநிகழ்வில் சுமார் 2000 இளநீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.