பாறுக் ஷிஹான்.
தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ளடங்குகின்ற பிரதான மற்றும் உள்ளக வீதிகளில் இவ்வாறு இனந்தெரியாத நபர்கள் தலைக்கவசமின்றி பொதுப்போக்குவரத்தைக் குழப்பும் வகையில் அதி சக்தி இயந்திரம் கொண்ட மோட்டார் சைக்கிளில் வருகை தந்து அச்சுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு குறித்த மோட்டார் சைக்கிளில் இருவர் தனியாக வருவதுடன், அதிக சத்தம் கொண்ட ஒலியெழுப்பி வீதிகளின் நடுவே அதி வேகமாகப் பயணம் செய்து ஏனையோரை அச்சுறுத்தி வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி பாராளுன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உட்பட சிலர் முறைப்பாடுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ்வாறானவர்கள் வீதிப்போக்குவரத்துச் சட்டத்தை மதிக்காமல் தொடர்ச்சியாக பாடசாலை, அலுவலக நாட்களிலும் மிக வேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தி சாகசங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சட்டவிரோதமாக பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து உயிர் சேதத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்ய பொலிஸார் உடனடியான நடவடிக்கையெடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.