Ads Area

கட்டாரில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த இலங்கை பெண் விமானத்தில் உயிரிழப்பு.

கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.


மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் அவர் இன்று (23) அதிகாலை 1.17 மணியளவில் கட்டாரின் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்துள்ளார்.


விமானம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.


நன்றி - மடவளை நிவுஸ்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe