பாறுக் ஷிஹான்.
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கீரி மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வளையா, சூரை, கிளவாளை என 3 வகையான மீன்கள் கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மருதமுனை, கல்முனைப்பகுதிகளில் கீரி இன மீன்கள் இன்று அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறித்த கீரி மீன்களின் பெறுமதி 1 கிலோ சுமார் 300 முதல் 400 வரை விற்பனையாவதுடன், இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களினால் ஒரு மீனவரின் நாள் வருமானமாக 05 முதல் 10 இலட்சமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மருதமுனை, கல்முனைக் கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடித்தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில், கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான சிறிய பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, கிளவாளை, வளையா, சூரை போன்ற மீன்கள் 1 கிலோ 2,000, 1,800 ரூபாய்க்களாக விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.