நேற்று (15.01.2024) சம்மாந்துறை கமு/சது/ஜமாலியா வித்தியாலய அதிபருக்கும் சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள், உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் நிகழ்வு பாடசாலை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர் உள்நுழைவு, பங்குபற்றல், பாதுகாப்பு, ஒழுக்க விழுமியம், வடிகான் அமைத்தல், பாடசாலை முகப்பு, கல்வி அபிவிருத்தி தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
எதிர்காலத்தில் இரு நிறுவனங்களும் இணைந்து கல்விப் பணிகளை ஆற்றுவது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
கல்வியின் நோக்கமான சமூகத்துக்குப் பொருத்தமான நற் பிரஜைகளை உருவாக்குதல் என்ற பணியினை பள்ளிவாசல்களின் ஊடாகவும் பாடசாலைகளின் ஊடாகவும் நாங்கள் மேற்கொள்ள முடியும் ஆதலால் இரு நிறுவனங்களும் அதற்கான முழுமையான பங்களிப்பு செய்ய வேண்டும் என கருத்து கூறப்பட்டது.