சம்மாந்துறையின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, ஒரு குடும்பத்திற்கு, ஒரு படித்தவர்" என உருவாக்கினால் மாத்திரமே ஊரில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் மக்களை உயர்த்த முடியும் எனும் நோக்கில் இயங்கி வரும் " Free for Education " அமைப்பினரால் அண்மையில் சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்திற்கு பிரண்டர் (Printer) ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு மிகவும் அவசியத் தேவையாகவிருந்த குறித்த பிரிண்டரினை " Free for Education " அமைப்பினர் பாடசாலையின் அதிபர் திரு. மொஹமட் ரிஸ்வான் அவர்களிடம் வழங்கி வைத்தனர்.