சவுதி அரேபியாவில் பொறியியல் துறையில் பணிபுரிவதற்காக போலியான பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கியது, தொழில்முறை உரிமம் பெறுவதற்காக சரிபார்க்கும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீது குற்றப்பிரிவு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தியதில் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டவர் அரபு நாட்டைச் சார்ந்தவர் என்றும், சிவில் இஞ்சினியரிங் வேலைக்காக, அவரது நாட்டில் இயங்கி வரும் பல்கலைக் கழகத்தின் பெயரில் போலியான சான்றிதழ் வழங்கினார் என்பது தெரிய வருகிறது. இதுபோல, போலியான சான்றிதழ் மோசடி செய்பவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என பப்ளிக் பிராசிகியூசன் எச்சரித்துள்ளது.