எக்ஸத் ஊடக வலையமைப்பின் 2024ம் ஆண்டுக்கான “தேசத்துக்காய் நாம் பிரஜை விருது” சேவைநலன் பாராட்டு விழாவில் சர்வதேச ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் விருது, நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
தமிழ்,முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்காகவும் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் அவலங்களை உள்நாட்டிலும் சர்வதேச ஊடகங்களுக்கும் செய்திகளாக உடனுக்குடன் கொண்டு செல்வதன் காராணமாக ஊடகத்துறைக்கு ஆற்றிய மற்றும் ஆற்றி வரும் அளப்பரிய சேவைகளைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் “தேசத்துக்காய் ஒன்றிணைவோம், தேசத்தைக் காத்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பினால் கடந்த 27.07.2024ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வில் இந்நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.