Ads Area

சம்மாந்துறைப் பிரதேச மல்வத்தை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்.

 (அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகல வைத்தியசாலைகளினதும் அபிவிருத்திக் குழுக்களை சந்தித்து வருகின்றார்.


அந்தவகையில் மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக அவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரை பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர்  திருமதி சகீலா இஸ்ஸடீன் (7) சந்தித்து கலந்துரையாடினார்.


வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், தற்போதுள்ள தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்ட பிராந்தியப் பணிப்பாளர் அபிவிருத்திக் குழுவினால் முன்வைக்கப்பட்ட தேவைகளில் சிலவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும் இதன்போது உறுதியளித்தார். அத்துடன் வைத்தியசாலையின் அபிவிருத்தியில் அபிவிருத்திக் குழுக்களின் பங்களிப்பு மிகப் பிரதானமானது எனவும் குறிப்பிட்டார்.


இந்தக் கலந்துரையாடலின் போது பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்களும் கலந்துகொண்டார்.


வைத்தியசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்து பொது மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்குவதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe