Ads Area

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு..!

 


சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் 


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை பசார் 7ஆம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (21) மாலை 4.15 மணியளவில் கட்டட வேலைக்காக மண்ணை பயன்படுத்தும் போதே குறித்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கட்டட நிர்மாண பணியில் ஈடுபட்டவர்களில் கைக்குண்டுடை கண்டதாக கூறப்படும் நபர் உடனடியாக 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டதுடன், கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இது தொடர்பாக குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இச் சம்பவம் தொடர்பாக நாளை (22) சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழப்பு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்ப்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe