பாறுக் ஷிஹான்.
காட்டு யானையொன்று பிரதான வீதியோரத்தில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொத்துவில், விக்டர் ஏத்தம் பிரதேச வீதியோரத்தில் காட்டு யானையொன்று இன்று (17) காலை உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடித்திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன், மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
மேலும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணமுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.