நூருல் ஹுதா உமர்.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்புக்கஞ்சி தயாரிக்குமிடங்கள் இன்று (03) திடீர் சுகாதாரப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எல்.எம்.அஸ்லம், ஏ.வாசித் அஹமட் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது, நோன்பு கஞ்சி தயாரித்தல், விநியோகித்தல் என்பனவற்றில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெளிவூட்டப்பட்டதுடன், பொலித்தீன், பிளாஸ்டிக் என்பனவற்றில் சூடான கஞ்சி விநியோகிப்பதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் சம்பந்தமான அறிவுரைகள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.