Ads Area

முன்மாதிரியாக செயற்படும் சம்மாந்துறை வீரமுனை வட்டார பிரதேச உறுப்பினர் ரிஷ்விகான்.



சம்மாந்துறை  வீரமுனை வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினரான திரு. ரிஷ்விகான் அவர்கள் தனது வட்டாரத்தில் தேர்தல் காலங்களில் தனது வெற்றிக்காக பாடுபட்ட வட்டார பிரதேச மக்களை ஒவ்வொரு மாதமும் ஒன்று கூட்டி அவர்களிடம் வட்டாரத்திற்கான தனது செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் உத்திகள் தொடர்பில் கலந்துரையாடும் ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.


வீரமுனைப் வட்டாரத்தில் தனது வெற்றிக்காக பாடுபட்ட சகல துறை சார்ந்த மக்களையும் ஒவ்வொரு மாதமும் ஒன்று கூட்டி தனது அரசியல் செயற்பாடு, வட்டாரத்திற்கான தனது வேலைத்திட்டங்கள் தொடர்பில் எவ்வித ஒழிவு-மறைவின்றி மக்களோடு ஒவ்வொரு மாதமும் கலந்துரையாட தீர்மானித்துள்ளார். இத்தகைய செயற்பாடானது தனக்கு வெற்றி வாய்ப்பை வழங்கிய மக்களுக்கும் தனக்குமான நேர்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் என்றும் அவர் நம்புவதாக தெரிவித்துள்ளார். 


இவ் வேலைத்திட்டத்தின் முதல் கலந்துரையாடலானது கடந்த 11ம் திகதி பிரதேச சபை உறுப்பினர் ரிஷ்விகான் அவர்களது தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான கலந்துரையாடலானது ஒவ்வொரு மாதமும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe