Ads Area

சம்மாந்துறை பிரதேச சமூர்த்தி சமுதாய சங்கத்தினால் கிராம சேவகருக்கான வரவேற்பும் பிரியாவிடையும்.

 தில்சாத் பர்வீஸ்.

 

கடந்த ஏழு வருடங்கள் ஒன்பது மாதங்களாக கல்லரிச்சல்-03 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றிய ஏ.எல்.அப்துல் றசூலின் பிரியாவிடை நிகழ்வும் கல்லரிச்சல்-03ம் பிரிவுக்கு புதிய கிராம சேவகர் கே.எம்.றூஸானா அவர்களை வரவேற்கும் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2025.07.27) பிரதேச சமூர்த்தி சமுதாய சங்கத்தின் தலைவர் எஸ்.டி.ஜௌபர் தலைமையில் கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில், கல்லரிச்சல்-03 பகுதியில் கிராம சேவகராகக்கடமையாற்றிய ஏ.எல்.அப்துல் றசூலுக்கு நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் சம்மாந்துறை பிரதேச சபைக்குத் தெரிவான தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.நயீம் (ஆசிரியர்) ஆகியோரையும் வரவேற்று கௌரவிப்பும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்விற்கு, கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய பாடசாலை அதிபர் யு.எல்.றபீக், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜௌபர், பொருளாதார அபிவிருத்தி  உத்தியோகத்தர் எஸ்.ஐ.ஜெஸீனா, சமூர்த்தி சமுதாய சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe