Ads Area

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தால் சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினால் சமூகப்பொறுப்புணர்வின் அடிப்படையில் சிறார்களுக்கு கற்றல் மற்றும் உணவுப் பொருட்கள் நேற்று (29) திங்கட்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


வீரமுனை, சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் கல்வி கற்கும் 13 மாணவர்களுக்கு தேவையான பொருட்களை சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதீப் குமாரவினால் வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக உத்தியோகத்தர் கே.கஜேந்தினியிடம் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe