நாடுதழுவிய ரீதியில் தற்போது மேற்கொள்ளப்படவுள்ள i-Road வீதிப் புணரமைப்புத் திட்டத்தில் சம்மாந்துறை உடங்கா - 02 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள அம்பாறை 14ம் வீதியும் புணரமைக்கப்படவுள்ளது.
குறித்த வீதியினை வீரமுனை வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ரிஸ்விகான் மற்றும் கௌரவ சஹீல் ஆகியோர் i-Road திட்டத்தின் பொறியியலாளர்கள், பாதையின் புணரமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ள RR நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சமூக ஆர்வலர்கள் சகிதம் அண்மையில் பார்வையிட்டனர்.
குறித்த வீதியானது எதிர்வரும் ஏப்ரல் மாதற்குகிடையில் புணர்நிர்மானம் செய்யப்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







