Ads Area

சம்மாந்துறையில் ஜனாதிபதி நிதியத்தின் இருபத்தோராவது மருத்துவ உதவிக் கொடுப்பனவு வழங்கி வைப்பு!.

ஜனாதிபதி செயலகத்தினால் சத்திர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி இம்முறை நிகழ்நிலை( Online) மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு இவ்வுதவி வழங்கப்படுகின்றது. 


ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கமைய  பிரதேச செயலகங்களின் ஊடாக நிகழ்நிலை அடிப்படையில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தெரிவுகள் இடம் பெறுகின்றன. 


அந்த வகையில் தமிழ் பிரிவு-02 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த எம்.ஜவாத் என்ற நபருக்கான கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சைக்காக எட்டு இலட்சம் நிதி உதவிக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. 


இவ் நிதியுதவி வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் இன்று(04)பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் வி.வாசீத் அஹமட்,பிரதேச செயலக  கணக்காளர் எஸ்.எல்.சர்த்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,அபிவிருத்தி முஹம்மட் ரிபாஸ், ஆகியோரும் கலந்து கொண்டனர். 


இதுவரை சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 21 நபர்களுக்கு இவ் நிதியுதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe