மஜீட். ARM.
நேற்று (25) சம்மாந்துறை - கிளிவெட்டி சந்திப் பகுதியில் இரண்டு கெப் (Cab) ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிவேகமாக வந்த இரண்டு வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மல்வத்தை 01 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக சம்மாந்துறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார், விபத்திற்கான மேலதிக காரணங்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

