Ads Area

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம் சபூர் வித்தியாலயத்தில் விசேட முன்னெடுப்பு.

 மஜீட். ARM 


சம்மாந்துறை கமு/சது சபூர் வித்தியாலயத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்புச் சிரமதான நிகழ்வு மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.


​சமூகப் பொறுப்புணர்வோடு முன்னெடுக்கப்பட்ட இந்தச் சிரமதான நிகழ்வில், பாடசாலையின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழல்கள் நுளம்பு பெருக்காத வண்ணம் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டன.


​இந்த சமூகப் பணியானது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் T. பரமேஸ்வரன் (PHI) அவர்களின் வழிகாட்டலில், பாடசாலை அதிபர் T.K.M. சிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


இதில் வீரமுனை இராணுவ முகாம் வீரர்களின் அயராத ஒத்துழைப்புடன், ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து அர்ப்பணிப்புடன் இப்பணியை முன்னெடுத்தனர்.


​"சுத்தமான சூழல் - ஆரோக்கியமான எதிர்காலம்" என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த கூட்டு முயற்சி, சமூக அக்கறையின் வெளிப்பாடாக அமைந்ததோடு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe