சம்மாந்துறை மஜ்லிஸ் அஷுராவின் புதிய அமீராக சமூக சேவையிலும், மார்க்கப் பணிகளிலும் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அப்துல் ஜப்பார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவரது தெரிவு சம்மாந்துறை முஸ்லிம் சமூகத்திற்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. சமூக ஒற்றுமை, மார்க்க வழிகாட்டல் மற்றும் பொதுநலப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது தலைமையின்கீழ் மஜ்லிஸ் அஷுரா சிறப்பாகச் செயல்படும் என பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
புதிய பொறுப்பை ஏற்க உள்ள அப்துல் ஜப்பார் அவர்கள் பள்ளிவாசல் தொடர்பான பல பதவிகளில் ஏற்கனவே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

