Ads Area

சம்மாந்துறை - கல்முனை மெகா சிட்டி அபிவிருத்திக்கு சிங்கப்பூருடன் ஒப்பந்தம்

பாரிய கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் ஒன்றிணைந்த உப நகர அபிவிருத்தி பிரதான திட்டங்களை தயாரிக்கும் பணியானது நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பணியினை மேற்கொள்வதற்காக வேண்டி Hydrology ஆய்வொன்றினை மேற்கொள்வதற்காக தேவை எழுந்துள்ளது. 
அதனடிப்படையில் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காக சிங்கப்பூரின் M/s Hydroinformatics Institute Pte. Ltd நிறுவனத்தின் உதவியினை பெற்றுக் கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திடுவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe