கிழக்கு மாகாணத்தில் சனத்தொகையிலும் சரி, நிலப்பரப்பிலும் சரி பரந்துபட்ட ஊராகவிருக்கும் சம்மாந்துறையானது பச்சைப் பசேல் என விவசாய நிலப்பரப்புக்களைக் கொண்ட அழகிய ஊர் மட்டுமல்ல மாறாக பல்வேறுபட்ட துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களையும் தன்னகத்தே கொண்ட ஊராகவும் மிளிர்ந்து வருகிறது.
தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி, இணையத்தளங்களின் வளர்ச்சி, சமூக வளையத்தளங்களின் வளர்ச்சிகளைத் தங்களுக்கு சாதகமாகப் பயண்படுத்தி அவற்றின் ஊடாக சம்மாந்துறையில் இருக்கும் இளைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கின்றார்கள் அந்த வகையில் ஒரு பொறியியலாளனாக தொழில் புரிந்தாலும் இயற்கையை ரசிக்கும் ஒரு இயற்கைக் காதலனாக இயற்கையை தத்துரூபமாக புகைப்படமெடுத்து அதனை தனது முகநுால் வாயிலாக பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றார் சம்மாந்துறையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மொஹமட் ஆசிப்.
அவரது கெமராக் கண்களுக்குல் அகப்பட்ட அழகோவியங்களை நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.
மொஹமட் ஆசிப்
0752844119
மொஹமட் ஆசிப்
0752844119