Ads Area

வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் பழைய தோற்றம் (படங்கள் இணைப்பு)

18 ம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வட இந்தியாவிலிருந்து பாய்க்கப்பல் மூலம் மட்டக்களப்பு வாவியினூடாக கோசப்பா, காரியப்பா ஆகிய இரண்டு பெரியார்கள் வீரமுனைக்கு அருகில் தரையிறங்கினார்கள். அவர்கள் அங்கிருந்து கொண்டே அருகாமையில் வாழ்ந்த தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய இரண்டு இனத்தாருக்கும் நல்லுபதேசங்கள் புரிந்து வந்தார்கள். அவர்களிருவரும் ஒருவர்பின் ஒருவராக மரணமடைந்ததும், அவ்விடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டனர். காலப்போக்கில் அவ்விடம் பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது.

பள்ளிவாசலின் முதலாவது புனர்நிர்மாணம் 1805 ல் இடம்பெற்றதென அறியப்படுகின்றது. பின்னர் 1935 ல் ஆரம்பித்து 1950 வரையிலும் இடம்பெற்ற புனர்நிர்மாணத்தில் கிழக்கிலங்கையின் மிக அழகான பெரிய பள்ளிவாசல் எனற பெயரைப் பெற்றது.

படங்களுக்கு நன்றி - சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல்.


























Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe