தகவல் - ஜலீல் ஜீ.
இன்று (18) சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான சாரணர் பயிற்சிப் பட்டறையும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
சாரண ஆணையாளர் ஜலீல் ஜீ தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மனிதநேய நற்பணி மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் -சிரேஷ்ட ஒளி-ஒலிபரப்பாளர் , கலாசிறீ -மனிதநேயன் இர்ஷாட்-ஏ-காதர் அவர்களும், கௌரவ அதிதியாக சம்மாந்துறை ஜனாஷா அமைப்பின் தலைவர் ,சமூக சேவகர்-கலந்தரலெவ்வை ஜாஜியாரும் கலந்து கொண்டனர்.
இவ் ஒருநாள் சாரணர் பாசறை சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமாகி சம்மாந்துறை அல்-அஸ்ஹர் பாடசாலை வரை கால் நடைப் பயணமாக சென்றடைந்தது.