சம்மாந்துறையின் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், நுால் ஆய்வுகளில் ஈடுபடுதல், எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தல், சம்மாந்துறையின் வரலாறோடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை நோக்காக கொண்டு சம்மாந்துறையில் உள்ள இலக்கியவாதிகளின் ஆறாவது “குயிலோசை இலக்கிய ஒன்றுகூடல்” இன்று (2018-05-13) சம்மாந்துறை மத்திய கல்லுாரியில் இடம் பெற்றது.
சிறப்பு அதிதியாக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்கள் கலந்து கொண்ட இன்றைய நிகழ்வில் கவிதை, சிறுகதை, வரலாறு, புதிய இலக்கியப் போக்குக்கள், சஞ்சிகை போன்றன தொடர்பாக வருகை தந்த இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கவிஞர்கள் போன்றோரால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
சிறப்பு அதிதியாக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்கள் கலந்து கொண்ட இன்றைய நிகழ்வில் கவிதை, சிறுகதை, வரலாறு, புதிய இலக்கியப் போக்குக்கள், சஞ்சிகை போன்றன தொடர்பாக வருகை தந்த இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கவிஞர்கள் போன்றோரால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இன்றைய நிகழ்வில் சிறுகதைகள் தொடர்பாக கவிஞர் மருதுார் ஏ ஹசன் அவர்களாலும், சீதக்காதி மற்றும் தக்சலை கதைகள் தொடர்பாக கவிஞர் மன்சூர் ஏ காதர் அவர்களால் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக நினைவலைகள் தொடர்பாக கவிஞினி இன்ஷிரா இக்பால் அவர்களாலும் குறிப்புக்களும், கருத்துக்களும் பறிமாறப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் கவிஞர் இஸ்மா பரீட், கலாபூஷணம் கலைமாமணி ஏ ஸி இஸ்மாலெப்பை, கவிஞர் டாக்டர் காலித் மற்றும் கவிஞர் சம்மாந்துறை அஸீஸ் ஆகியோரால் கவிதைகள் வாசிக்கப்பட்டதோடு, கவிதைகள் தொடர்பான ஆரோக்கிய கருத்துப் பரிமாறல்களும் வழங்கப்பட்டதோடு “நேசம்” என்ற புதிய சஞ்சிகை அறிமுகப்படுத்தப்பட்டு அது தொடர்பாக ஊடகவியலாளர் அஹமட்லெப்பை அன்சார் அவர்களால் விளக்கமும் அளிக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் கவிஞர் இஸ்மா பரீட், கலாபூஷணம் கலைமாமணி ஏ ஸி இஸ்மாலெப்பை, கவிஞர் டாக்டர் காலித் மற்றும் கவிஞர் சம்மாந்துறை அஸீஸ் ஆகியோரால் கவிதைகள் வாசிக்கப்பட்டதோடு, கவிதைகள் தொடர்பான ஆரோக்கிய கருத்துப் பரிமாறல்களும் வழங்கப்பட்டதோடு “நேசம்” என்ற புதிய சஞ்சிகை அறிமுகப்படுத்தப்பட்டு அது தொடர்பாக ஊடகவியலாளர் அஹமட்லெப்பை அன்சார் அவர்களால் விளக்கமும் அளிக்கப்பட்டது.
நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்கள் தற்காலத்தில் உள்ள புதிய இலக்கியப் போக்குகள் தொடர்பாக தனது ஆரோக்கியமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதோடு குயிலோசை சந்திப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.