Ads Area

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்குபற்ற தெரிவாகியுள்ளார் சம்மாந்துறை நிப்றாஸ்.

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் இளைஞர் பரிமாற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழுவில் கிழக்கு மாகாணப் பிரதிநிதியாக சம்மாந்துறையைச் சேர்ந்த முஹமட் நிப்றாஸ் தெரிவாகியுள்ளார்.

இளைஞர் விவகார அமைச்சின் கீழ் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் இக்குழுவானது எதிர்வரும் எதிர்வரும் ஒக்டோபர் பத்தாம் திகதி இந்தியா நோக்கி பயணமாகவுள்ளதுடன் எட்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் அங்கு பங்குபற்றவுள்ளனர்.

26 பேர் கொண்ட இக்குழுவில் இடம்பெற்றுள்ள 3 முஸ்லிம்களில் கிழக்கு மாகாணப் பிரதிநிதியாக சம்மாந்துறையைச் சேர்ந்த நிப்றாஸ் தெரிவாகியுள்ளார் தொழிநுட்பப் பொறியியலாளரான இவர் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதீ அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சில் பணியாற்றி வருகின்றார்.

அத்துடன் சம்மாந்துறை கைன்ட்ஸ் 21 இளைஞர் கழகத்தின் தலைவராகவும், சம்மாந்துறை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் கலாசாரப் பிரிவுக்கான அமைப்பாளராகவும் செயற்படுகின்ற இவர் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய பழைய மாணவருமாவார். 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe