Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழாவும் கலை கலாச்சார நிகழ்வும்.

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச சபையின் நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வாசிப்பு எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழாவும் கலை கலாச்சார நிகழ்வும் நேற்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வாசிப்பு எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயச்சந்திரன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், நூலகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,  நூலங்களின் ஊழியர்கள் உள்ளி;ட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் சம்மாந்துறையின் இளம் கண்டுப்பாளர்களான எம்.எம்.அனூஸ், எஸ்.வினோஜ்குமார் மற்றும் அதிதிகளும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe