Ads Area

3 தங்கம் உட்பட 7 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ள சம்மாந்துறை இளம் விஞ்ஞானி.

காரைதீவு சகா.

இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் முதற் தடவையாக ஏழு பதக்கங்களைப் பெற்ற சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்த யாழ்.பல்பலைக்கழக மாணவன் சோமசுந்தரம் வினோஜ் குமார் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் 2012ம் ஆண்டில் கனிந்து நாணயக்கார 5 பதக்கங்களைப் பெற்று உச்சகட்ட சாதனை படைத்திருந்தார் அவர் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றிருந்தார்.

இச் சாதனையை முறியடித்து சோமசுந்தரம் வினோஜ்குமார் 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களையும், பரிசாக 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவினையும் பெற்றுள்ளார்.

கடந்த 26ம் திகதி இலங்கை ஆய்வாளர்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு BMICH இல் நடைபெற்ற 3வது தேசிய புத்தாக்குனர் தின விருது வழங்கும் விழாவிலேயே இப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக மட்டப் போட்டியில் வழங்கப்பட்ட முதல் 9 தங்கப்ப பதக்கங்களில் 3 தங்கப் பதக்கங்களுடன் 1 வெள்ளி 3 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும்.

இளம் விஞ்ஞானியான வினோஜ் குமார் 86 புதிய கண்டுபிடிப்புக்களைப் கண்டு பிடித்துள்ளார் இவற்றில் 38 கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டத்தில் விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளதோடு 3 கண்டுபிடிப்புக்கள் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

அண்மையில் தாருஸ் ஸபா முகநுால் தொலைக்காட்சிக்கு சம்மாந்துறையின் இளம் விஞ்ஞானி வினோஜ் குமார் அவர்கள் வழங்கி நேர்காணலை கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து பார்க்கலாம்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe