Ads Area

சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலையில் சிங்கள பயிற்சியினை நிறைவு செய்த தமிழ்-முஸ்லிம் மாணவர்களின் கலை நிகழ்ச்சி.

(எம்.எம்.ஜபீர்)


அம்பாரை மாவட்டத்திலுள்ள மூவின இளைஞர் யுவதிகளிடையே மொழிகளினூடாக இன ஐக்கியத்தை பேணும் வகையில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் கீழுள்ள தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள மொழி பயிற்சி வகுப்பு நடாத்தப்பட்டு வருகின்றது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தில் சிங்கள மொழிப் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளின் கலை நிகழ்வு அல்-அர்சாத் மகா வித்தியால மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

சம்மாந்துறை சமூக மேம்பாட்டு சகவாழ்வு சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.சிறாஜூடீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான  ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட செயலக தேசிய ஒருங்கிணைப்பு மேம்பாட்டு உதவியாளர் எப்.பிரதீஸ்கரன், சம்மாந்துறை அல்-அர்ஷாத் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.அப்துல் மஜீட், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் வளவாளர்களான என்.எம்.எம்.புவாட், ஏ.எம்.எம்.முஜீப், கே.பி.பிரதீப், ரவீந்திரன் சந்திரகுமாரி உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர். 












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe