Ads Area

வங்கி முகாமையாளர்களுக்கான திறன் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு.

ஏ.ஜே.எம்.ஹனீபா.

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வங்கி குறு நிதிப்பிரிவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட தமிழ் மொழி மூல வங்கிச்சங்க முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், ஆகியோருக்கான திறன் அபிவிருத்தி தொடர்பான ஒருநாள் செயலமர்வு அண்மையில் 2018.12.20ம் திகதி  சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சம்மாந்துறை பிரதேச தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் தலைமையில் ஆம்பமானது.

இந்த செயலமர்வில் கௌரவ அதீதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா கலந்து கொண்டார்.

வளவாளராக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வங்கி குறுநிதிப்பிரிவின் இணைப்பாளரும்,முன்னாள் அம்பாறை மாவட்ட சமுர்த்தி கணக்காய்வு உத்தியோகத்தரும், முன்னாள் சமூர்த்தி இணைப்பாளரும் உதவிப் பணிப்பாளருமான ஐ.அலியார் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபீபுள்ளா ஆகியோர் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட கண்காணிப்பு உத்தியோகத்தர்களான ஏ.ஜே.எம்.ஹனீபா, ரீ.தெய்வேந்திரன், எம்.ரீ.நஸார் , மாவட்ட வங்கி பிரிவு முகாமையாளர் எல்.ஜீ.பீ.நிஷாந்த, வங்கி பிரிவு உத்தியோகத்தர் எம்.எம்.எம்.மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe