ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிட்ட கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் உள்ள இரகசிய ஒப்பந்தத்தின் ஒரு உரையாக இருக்கலாம் என மஹிந்த தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஏற்படுத்தியுள்ள இரகசிய ஒப்பந்தம் என்ன என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உடனடியாக நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என மஹிந்த தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் புதிய அரசியலமைப்பிற்கமைய இனவாதத்தை நிறைவுக்கு கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதே தவிர நாட்டை பிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறை இதில் ஒழிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.