ஏ.ஜே.எம்.ஹனீபா.
மனிதநேய நற்பணி பேரவை சம்மாந்துறை சிறிலங்கா அமைப்பினதும் ஸம் ஸம் பௌன்டேஷன் அமைப்பினதும் ஏற்பாட்டில் சம்மாந்துறை கோட்டத்திலுள்ள வருமானம் குறைந்த 300 தமிழ்,முஸ்லீம் மாணவர்களுக்கு தலா 3000/- பெறுமதியான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் மனிதநேய நற்பணி பேரவை சம்மாந்துறை சிறிலங்கா அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் தேசமான்ய இர்ஷாட் ஏ காதர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கலந்து சிறப்பித்தார்.