நன்றி - Rinoosa Abdhul Baary
அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட குறித்த நேர்காணலுக்கு வழங்கப்பட்டுள்ள பின்னூட்டங்கள் சான்று பகர்கின்றன.
பல பெரும்பான்மை சகோதரர்களின் பெயர்களைத் தாங்கியுள்ள பின்னூட்டங்கள் நேர்மறைக் கருத்துக்களையும் அவர்களின் உள்ளக்கிடக்கைகளையும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.
பெரும்பான்மை சகோதரர்களின் பெயர்களைத் தாங்கியுள்ள நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களிலிருந்து ஒருசிலவற்றை மாத்திரம் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்த்து இங்கே பதிவிடுகிறேன்.
இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் பல சிங்கள மக்களிடம் உள்ள சந்தேகங்கள் வெறும் ஒன்றரை மணிநேர நிகழ்ச்சியினூடாக ஓரளவுக்கேனும் களையப்பட்டுள்ளமை இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரும் வெற்றியாகும்.
அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் இந்தத் தூய பணி இன்னும் தொடரவேண்டும்.
2. Arunya Nirmaliee: இன்றிலிருந்து எனக்கு முஸ்லிம் பெண்மணிகள் புர்கா அணித்திருக்கின்றனர் என்பதால் கோபமோ வெறுப்போ ஏற்படாது. நாம் அவர்களை மதிக்க வேண்டும். இலங்கையில் அரைகுறை ஆடையணிந்து திரிகின்ற சகோதரிகளுக்கு சிறந்ததொரு செய்தி வழங்கப்பட்டுள்ளது.
3. Krishan Kaushalya: (இந்த நிகழ்ச்சி முஸ்லிம்களும் கேட்கும் விதமாக தமிழ்மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும். அவர்களும் இதனைக் கட்டாயம் கேட்க வேண்டும்). இந்த மௌலவி சிறந்த அறிவைக் கொண்டுள்ளார். சிறந்ததொரு மனிதர். எல்லாவற்றையும் நேர்மையாக வெளிப்படுத்துகின்றார். இவரைப் போன்று எல்லா முஸ்லிம் சகோதரர்களும் நினைப்பார்களேயானால் இந்த நாடு எவ்வளவு அழகானதாக இருக்கும். சத்துர நிகழ்ச்சியை நகர்த்திச்செல்கின்ற விதம் பாராட்டத்தக்கது. இந்த முஸ்லிம் சகோதரரிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
4. Sulari Hansika: பெறுமதியான ஒரு கலந்துரையாடல். கற்றுத்தேர்ந்த மக்கள் ஒரு பெறுமதியான புத்தகத்தைப் போன்றவர்கள். எமக்கு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன.
5. Dimuth Aladeniya: இவர் சிங்கள மொழியைப் பிரயோகிக்கின்ற விதத்தைப் பார்க்கின்றபோது மெய்சிலிர்த்தது எனக்குமட்டும்தானா? சிங்களவர்களான எங்களின் வரலாற்றிலிருந்தே உதாரணங்களை எடுத்து, கத்தியால் குத்துவத்தைப் போன்று எங்களையே அதுபற்றிக் கேள்வி கேட்கின்றபோது இடிவிழுந்ததுபோல் வெட்கமும் கவலையும் ஏற்பட்டது எனக்குமட்டும்தானா?

