Ads Area

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கும் படையினருக்கு கல்முனை மக்களின் கனிவான உபசரிப்பு.

கடந்த ஒரு வாரமாக நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளில் தம்மை அர்ப்பணித்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காய் முப்படையினரும் அயராது பாடுபட்டுவருகின்றனர்.

கல்முனை பிராந்தியத்தில் மேற்படி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் படையினர்களை கல்முனையன்ஸ் போரம் நேரில் சந்தித்து கல்முனை மக்கள் சார்பாக நன்றிக்காணிக்கைகள் செலுத்தியதோடு படையினருக்கு சிற்றுண்டிகளும், குளிர்பானங்களும் வழங்கிவைத்தது.

இதன்போது தீவிரவாதத்தை நாட்டிலிருந்து களையெடுக்கும் முயற்சியில் கல்முனை பிராந்திய முஸ்லிம்கள் தங்களுக்கு பூரண ஒத்துழைப்பும், முழுப்பங்களிப்பும் வழங்குவதாக விஷேட அதிரடிப்படை மேஜர் தர்மசேன குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe