முஹம்மட் றிஸ்வான் (ஆசிரியர்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் 2018ம் ஆண்டு இடம் பெற்ற GCE O/L பரீட்சையில் 9A பெற்ற 11 மாணவர்களையும் 8A பெற்ற 5 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் ACAM.இஸ்மாயில் தலைமையில் இன்று (01.04.2019) ஆரம்பமானது.
இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி V.நிதர்சினி அவர்களும்,சிறப்பு அதிதியாக சம்மாந்துறை கோட்டக்கல்விப்பணிப்பாளர் MA சபூர்தம்பி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பிரதி அதிபர்கள்,தரம் 11 பகுதித் தலைவர்களினால் மாணவர்கள் பாராட்டப் பட்டனர்.





















