கடந்த ஞாயிற்றுக் கிழமை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதிலும் தேடுதல்களை பாதுகாப்புப் பிரிவினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
இதேவேளை விமான நிலையத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானப் பயணிகள் மாத்திரமே கட்டுநாயக்க விமான நிலைய கட்டிடப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.