Ads Area

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவின் முக்கிய அறிவித்தல்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதிலும் தேடுதல்களை பாதுகாப்புப் பிரிவினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

இதேவேளை விமான நிலையத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானப் பயணிகள் மாத்திரமே கட்டுநாயக்க விமான நிலைய கட்டிடப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe