ஷக்கி செய்ன்.
புத்தள பிரதேச செயலகத்தில் நடைபெறும் அரச நிர்வாகம் இலங்கை சட்ட விதிகளுக்கு அமைவாக நடைபெறுகிறதா? அல்லது காட்டு தர்பார் அரசு நிர்வாகம் நடைபெறுகிறதா?
இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியல் யாப்பு படி இந்த நாட்டில் வாழுகின்ற அனைவருக்கும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதக் கலாச்சாரங்களையும் ஆடைகளை சுதந்திரமான முறையில் பின்பற்றுவதற்கு சகல உரிமைகளும் உண்டு.
புத்தளம் வாழ் மக்களே எமது ஜனநாயக ரீதியான உரிமையை பாதுகாப்பதற்காக நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது
01. புத்தள பிரதேச செயலக அரச நிர்வாகிகள் மதவாதத்தை, இனவாதத்தை தூண்டுகின்றன விதத்தில் ஜனநாயக ரீதியான அபாயா ஆடை உரிமையை மறுக்கின்ற விதத்தில் செய்யப்படுகிறார்கள் என்று இவர்களுக்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையெழுத்து வேட்டை ஒன்றை நடத்த வேண்டும்.
03. நாட்டின் சட்ட ரீதியான ஆடை உரிமையை பின்பற்றுவதற்கு தடையாக இவர்கள் காணப்படுகிறார்கள் என்று மனித உரிமை ஆணைக்குழு, ஐக்கிய நாட்டு சபை ,வெளி நாட்டு இஸ்லாமிய நாடுகளுக்கும் ,ஏனைய சர்வதேச சமூகத்திற்கு ,சரியான ஆவணங்களை சமர்ப்பித்து இவர்களின் குற்றச் செயலை தெளிவுபடுத்தி எமது உரிமையை வெல்வதற்கான முயற்சி எடுத்தல்.
04. விஷேடமாக உள்நாட்டு வெளிநாட்டு சர்வதேச ஊடகங்களுக்கு இவர்களின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தல் ஊடக மாநாடு மூலம்.
05. எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவர்களுக்கு மக்கள் ஒரு தெளிவான செய்தியை முன்வைக்கவேண்டும் எங்களது ஜனநாயக ரீதியான ஆடை உரிமையை நீங்கள் பெற்று தந்து அதற்கு எதிராக இருக்கின்ற பத்தள பிரதேச செயலக அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசின் பங்காளிகளாக நீங்கள் இருக்கக் கூடாது வெறும் வெற்று வீர பேச்சுக்கலை பாராளுமன்றத்தில் பேசுவதாலும் ,கதிரைகளை சூடாக்குவதால் எதையும் நீங்கள் சாதிக்க முடியாவிட்டால் மக்களோடு மக்களாக வீதியில் இறங்கி போராடுவது சர்வதேச சமூகத்துக்கு இவர்களின் உரிமை மீறல் ஜனநாயக ரீதியான காட்டு தர்பார் அடக்குமுறையை தெளிவுபடுத்துவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மக்களால் புறக்கணிக்கப்படுகின்ற அரசியல் வாதிகளாக நீங்கள் மாறுவீர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை.