கல்முனை விடையத்தில் தமிழ் அரசியல்வாதிகளைப் ஒதுக்கி விட்டு தேரர்களை களமிறக்கியது சரியில்லை அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
அப்படித்தான் நான், ததேகூட்டமைப்பையும் அரவணைத்து அனுசரித்து போகிறேன். அதனால்தான் கல்முனை மக்களின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு போக முடிவு செய்த போது கூட்டமைப்பின் அம்பாறை எம்பி கோடீஸ்வரனை அழைத்து சொன்னேன்.
அவர்தான் "சுமந்திரன் எம்பியை, வஜிர அமைச்சரின் உறுதி கடிதத்துடன் எப்படியாவது கூட்டி வாருங்கள் அண்ணா" என்று என்னை வலிந்து கேட்டுக்கொண்டார்.
ததேகூ பல விடயங்களை கோட்டை விட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் அதற்கான பதில் இதுவல்ல. அதேபோல், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளை நிராகரித்து விட்டு, பெளத்த தேரர்கள் கூறியதன் பேரில் போராட்டத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும் முனைவது சரியானதல்ல.
தமிழ் தலைமைகளின் இயலாமை காரணமாகவே தமிழ் மக்கள் மாற்று வழி தேடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கிழக்கு தமிழர்களின் மாற்று இந்த தேரர்கள் அல்ல.
அதேபோல் தமிழர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு, தேரர்கள் உள்ளே நுழைந்தமைக்கு பிடிவாதக்கார முஸ்லிம் தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும்.