பாறுக் ஷிஹான்
பிரதேச அபிவிருத்தியில் அரசியல் நடாத்தப்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இனிவரும் காலங்களில் முன்மொழிவு விடயங்களில் சரியான நடவடிக்கை எடுக்கபடாது விட்டால் ஆட்சி அதிகாரத்திற்கான ஆதரவினை விலக்க நேரிடும் என தெரிவித்தனர்.
நிந்தவூர் பிரதேச சபையின் 15 ஆவது சபை அமர்வு வியாழக்கிழமை (27) காலை 10.20 மணியளவில் பிரதிதவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.
மேற்குறித்த இரு அறிக்கைகளும் சபையில் அங்கீகரிப்பிற்கு சபையில் விடப்பட்டபோது சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து சபையை வழிநடத்திய பிரதி தவிசாளர் பிரதேச அபிவிருத்தியில் பாரபட்சம் காட்டுவதாக கூறி முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களான முகமட் தம்பி சப்றாஸ், ஏ.அலிஹான், எம்.எம் அன்ஸார், சட்டத்தரணி றியாஸ் ஆதம், கே.எம்.எம். ஜாரீஸ், எம். ஐ பாத்திமா றிஹானா ஆகியோர் தமது முன்மொழிவுகளுக்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
இதனை செவிமடுத்த பிரதி தவிசாளர் இனிவரும் காலங்களில் சகல உறுப்பினர்களது முன்மொழிவுகளையும் அங்கீகரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து சபை வழமை நிலைக்கு வந்தது.
தொடர்ந்தும் தவிசாளரின் உரை ஆதன அறவீடுகள் சம்பந்தமாக முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பு படையினரின் வசம் உள்ள அவர்கள் பயன்படுத்தும் பழைய பிரதேச சபையின் மின் கட்டணணம் தொடர்பாக உறுப்பினர்களுக்கிடையே வாதப்பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்ட்டது.
அடுத்து உறுப்பினர்களின் வழமையான முன்மொழவுகள் சில சபையில் எடுக்கபட்டு இறுதியாக சபைக்கு புதிதாக வந்திருந்த உறுப்பினரின் உரையுடன் சபை சிறிது நேரத்தின் பின்னர் நிறைவடைந்தது.
சபைக்கு புதிய உறுப்பினராக நிர்தவூர் 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஆதம்பாவா ரிபானா என்பவர் வருகை தந்திருந்தார்.இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2 ஆம் வட்டார உறுப்பினரான திருமதி நூர் முஹம்மது வசீரா என்பவர் இராஜனாமாச் செய்ததை அடுத்து எழுந்த வெற்றிடத்திற்கு தெரவானமை குறிப்பிடத்தக்கது.
இவர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் எம்.ஏம்.எம் தாஹீர் தவிசாளராக இருப்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் வை.எல் சுலைமாலெப்பை உப தவிசாளராகவும் உள்ளார்.மேற்படி சபை நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.