800 கிலோ எடை கொண்ட இராட்சத திருக்கை மீன் ஒன்று நேற்று மாலை காத்தான்குடி மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென கரையை நோக்கி வந்த பாரிய திருக்கை மீனைப் பிடித்து கரைக்கு இழுத்து வந்தனர்.
இம்மீனை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அதிசயத்துடன் பார்வையிட்டனர்.இந்த இராட்சத திருக்கை மீன், துண்டுகளாக வெட்டி விற்பனை செய்யப்பட்டது.