Ads Area

தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் பசுமைப் புரட்சித் திட்டம்.

தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சுகாதார சிகிச்சை நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட கழிவறைத் தொகுதியினை பொதுமக்களுக்கு கையளித்தலும் மரக்கன்று நடுதலும்.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ் ஐ.முகம்மட் கபீர் தலைமையில் 2019.08.26 திங்கட்கிழமை செந்நெல் கிராமம் 01 இல் சுகாதார சிகிச்சை நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

தமிழா ஊடக வலையமைப்பின் பசுமைப் புரட்சி திட்டம் -2019 கீழ் வித்யாசாகர் கலை மன்றத்தின் போசகர் பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் ஐயா அவர்களின் அன்பளிப்பின் மூலம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையின் சுகாதார சிகிச்சை நிலையத்தில் கழிவறைத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டடு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் அதிதிகளால் நட்டப்பட்டன.

இவ்விழாவை தமிழா ஊடக வலையமைப்பு பணிப்பளார் எஸ்.முஹம்மது ஜெலீஸ் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தர்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த்தாய் அறக்கட்டளை தமிழ்நாடு இந்தியா திரு. உடையார்கோயில் குணா அவர்களும், சிறப்பு அதிதிகளாக எஸ்.எல்.முஹம்மது ஹனீபா பிரதேச செயலாளர் சம்மாந்துறை, பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் நீர்ப்பாசன பணிப்பாளர் காரியாலயம் சம்மாந்துறை, எம் .எச். எம்.இப்றாஹிம் தலைவர் சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்கப் பேரவை, எம்.ஐ. அச்சி முஹம்மட் - ஆலோசகர் தமிழா ஊடக வலையமைப்பு, ஜே. எம். பாஸித் பிராந்திய முகாமையாளர் தமிழா ஊடக வலையமைப்பு மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு எம்.பி.எம்.றின்ஸான், ஆர்.ஜே.இம்றான் மற்றும் பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள் - பரீட் அல்தாப்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe